சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி
சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி.
கொரோனா பரவலால் பல மாதங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழி சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வில் குறைந்த எண்ணிக்கை ஆட்களோடு படப்பிடிப்புகள் நடக்கின்றன.
தியேட்டர்கள் இன்னும் மூடிக்கிடக்கின்றன. இதனால் திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி, நடிகர் நடிகைகளிடம் நிதி திரட்டி உதவி வருகிறது.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த திரைப்பட கலைஞர்களுக்கு உதவ ரூ.50 லட்சம் நிதி வழங்கி உள்ளார். அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா சினிமா கலைஞர்களுக்கு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு மக்கள் உதவியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
தியேட்டர்கள் இன்னும் மூடிக்கிடக்கின்றன. இதனால் திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி, நடிகர் நடிகைகளிடம் நிதி திரட்டி உதவி வருகிறது.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த திரைப்பட கலைஞர்களுக்கு உதவ ரூ.50 லட்சம் நிதி வழங்கி உள்ளார். அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா சினிமா கலைஞர்களுக்கு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு மக்கள் உதவியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story