கணவருடன் பிரச்சினையா? பிரியாமணி விளக்கம்


கணவருடன் பிரச்சினையா? பிரியாமணி விளக்கம்
x
தினத்தந்தி 24 July 2021 1:00 AM GMT (Updated: 24 July 2021 1:00 AM GMT)

கணவருடன் பிரச்சினையா? பிரியாமணி விளக்கம்.

நடிகை பிரியாமணிக்கும், தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் நடந்த திருமணம் செல்லாது என்று முஸ்தபாவின் முதல் மனைவி ஆயிஷா எதிர்ப்பு கிளப்பி இருப்பது பரபரப்பாகி உள்ளது.

இதுகுறித்து ஆயிஷா கூறும்போது, “என்னை முஸ்தபா இன்னும் சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. நாங்கள் பிரிந்து இருந்தாலும் இன்னும் அவர் எனது கணவர்தான். பிரியாமணி, முஸ்தபாவின் திருமணம் சட்டப்படி செல்லாது’’ என்றார்.

இதனால் பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளதாகவும், கணவருடன் அவருக்கு சுமுக உறவு இல்லை என்றும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பிரியாமணி அளித்துள்ள பேட்டியில், “எனது கணவர் முஸ்தபாவும், நானும் எங்களுடைய உறவில் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறோம். அவர் தற்போது அமெரிக்காவில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். ஆனாலும் ஒருவருக்கொருவர் தினமும் பேசிக்கொள்கிறோம். வேலையில் அவர் பிஸியாக இருந்தால் செல்போனில் குறுந்தகவல் அனுப்பி நலம் விசாரிப்பார். வேலை முடிந்ததும் என்னை அழைப்பார். அதுபோல் நான் படப்பிடிப்பில் பிஸியாக பேசமுடியாத நிலையில் இருந்தாலும் குறுஞ்செய்தி அனுப்பி நலம் விசாரிப்பேன்'' என்று கூறியுள்ளார்.

Next Story