சினிமா வாழ்க்கை போராட்டமாக உள்ளது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்


சினிமா வாழ்க்கை போராட்டமாக உள்ளது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
x
தினத்தந்தி 16 Aug 2021 9:05 AM GMT (Updated: 16 Aug 2021 9:05 AM GMT)

சினிமா வாழ்க்கை போராட்டமாக உள்ளது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

“எனக்கு சினிமா பின்னணி இல்லை. நடிகையான எனது பயணமும் சுலபமாக இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். எனது குடும்பம் சென்னை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தது. 8 வயதில் தந்தையை இழந்தேன். படிக்காத எனது அம்மா குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். அம்மாவுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் மும்பை சென்று புடவைகள் வாங்கி வந்து கொஞ்சம் அதிக விலை வைத்து சென்னையில் விற்பனை செய்வார். எனக்கு பெரிய கனவு எதுவும் இல்லை. சினிமாவில் நடிகையாக முயற்சி செய்தபோது எத்தனை தடைகள் வருமோ அத்தனையும் வந்தது. எல்லாவற்றையும் எதிர்கொண்டேன். பாலியல் ரீதியாக எனது உருவம், தோற்றம், முகம், சரும நிறம் போன்றவற்றை வைத்து கொடூரமாக கேலி செய்தார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். எனது முதல் படம் சரியாக ஓடவில்லை. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போதும் எனது சினிமா வாழ்க்கை போராட்டமாகத்தான் உள்ளது.''

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

Next Story