தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கினார்


தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கினார்
x
தினத்தந்தி 11 Sep 2021 12:22 AM GMT (Updated: 11 Sep 2021 12:22 AM GMT)

நடிகர் சிரஞ்சீவியின் உறவினரான நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கியுள்ளார்.




ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சாய் தரம் தேஜ்.  நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனான இவர் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்தவர்.  ரே, சுப்ரமணியம் பார் சேல், தேஜ் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஐதராபாத்தில் மாதாப்பூர் பகுதியில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றுள்ளார்.  திடீரென, அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்திற்குள்ளானது. இதில் பலத்த அடிபட்ட சாய், சுயநினைவின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடக்கிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிகழ்வு சாய் தரம் தேஜ், சிரஞ்சீவி குடும்பத்தினர் இடையே சோகம் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, தேஜ் விபத்தில் சிக்கிய செய்தியை அறிந்த அவரது தாய் மாமாக்களில் ஒருவரும், நடிகருமான பவன் கல்யாண், சிரஞ்சீவி உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் அல்லு அரவிந்த் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர்.

திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தேஜ் விரைந்து குணமாக கடவுளை வேண்டுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.  அவர், ரிபப்ளிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


Next Story