யாஷிகா ஆனந்த் நடித்த ‘பெஸ்டி’ விருதுகளை குவிக்கிறது


யாஷிகா ஆனந்த் நடித்த ‘பெஸ்டி’ விருதுகளை குவிக்கிறது
x
தினத்தந்தி 1 Oct 2021 12:42 PM GMT (Updated: 1 Oct 2021 12:42 PM GMT)

யாஷிகா ஆனந்த் நடித்த ‘பெஸ்டி’ விருதுகளை குவிக்கிறது.

‘ஓம் முருகா’ பட புகழ் அசோக்குமார், சமீபத்தில் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்த ‘பெஸ்டி’ படத்தை, ஆர்.எஸ்.சினிமா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அதில் வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன் உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரங்கா டைரக்டு செய்து இருக்கிறார். சாரதிராஜா தயாரித்துள்ளார். டைரக்டர் ரங்கா கூறியதாவது:-

‘‘இளமை துள்ளலுடன் திகிலும், மர்மமும் நிறைந்த படமாக ‘பெஸ்டி’யை உருவாக்கினேன். திகில், மர்மத்துக்கு புதிய பரிமாணத்தை காட்டியிருக் கிறேன்.

படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினோம். அதில் டொராண்டோ திரைப்பட விழாவில், ஒளிப்பதிவாளர் ஆனந்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பெற்று தந்தது.

அமெரிக்காவில் நடந்த லாஸ்விகாஸ் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற பட விழாவில் அசோக்குமாருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. மேலும் திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றுக்கும் 2 விருதுகள் கிடைத்தன.’’

Next Story