கார் பந்தயத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்பு
‘ஒருநாள் கூத்து’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிருபுடிச்சவன்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர், நிவேதா பெத்துராஜ். இவர் மதுரையை சேர்ந்தவர் என்றாலும் வளர்ந்தது, படித்தது துபாயில்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை வந்தார். அவர் கையில் இப்போது 3 புதிய படங்களை வைத்து இருக்கிறார். நிவேதா பெத்துராஜ் வேகமாக கார் ஓட்டுவார். துபாயில் இருந்தபோது சில கார் பந்தயங்களில் கலந்து கொண்டார். சென்னையில் அவர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில், கார் பந்தயத்துக்கான பயிற்சி பெற்றார். இந்த நிலையில், கோவையில் அடுத்த வாரம் கார் பந்தயம் நடக்கிறது. அதில் நிவேதா பெத்துராஜ் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்று கோவை புறப்பட்டு சென்றார். அவருடன் தம்பி நிஷாந்தும் கோவை சென்றுள்ளார்.
நிவேதா பெத்துராஜ் வீட்டில் நிறைய பூனைகளை வளர்த்து வருகிறார். கார் பந்தயத்துக்காக கோவை சென்றுள்ள அவர் தன்னுடன் 3 பூனைகளை கொண்டு போய் இருக்கிறார். அதில் 2 நம்மூர் பூனைகள். இன்னொன்று வெளிநாட்டு பூனை.
Related Tags :
Next Story