"கடினமான காலம் உன்னை வலிமையாக்கும்" - ஷாருக்கான் மகனுக்கு கிர்த்திக் ரோஷன் ஆறுதல்


கடினமான காலம் உன்னை வலிமையாக்கும் - ஷாருக்கான் மகனுக்கு கிர்த்திக் ரோஷன் ஆறுதல்
x
தினத்தந்தி 7 Oct 2021 11:09 AM GMT (Updated: 7 Oct 2021 11:09 AM GMT)

ஷாருக்கானின் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்களான திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மும்பை

மராட்டிய  மாநிலம் மும்பையில் இருந்து, கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 அங்கு கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது.இதை 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர் ஆவார்.

ஆர்யனுக்கு ஷாருக்கான் போன்று நடிப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை, ஆனால் படங்களை இயக்குவதில்தான் அதிகம் ஆர்வம் கொண்டவர் எனக்கூறப்படுகிறது. ஒரு நேர்காணலில் ஆர்யன் ஒரு சிறந்த எழுத்தாளர் என ஷாருக் குறிப்பிட்டார். இயக்குநருக்கான படிப்புகளையும் ஆர்யன் அமெரிக்காவில் பயின்றுள்ளார். தி இன்க்ரிடிபில்ஸ் என்ற படத்திற்கு டப்பிங் கொடுத்ததற்காக சிறந்த குழந்தை டப்பிங் ஆர்ட்டிஸ்டுக்கான விருதையும் பெற்றுள்ளார்.

பெரியதிரை நட்சத்திரங்களின் குழந்தைகளைப் போலவே ஆர்யன் கானும் வெளிநாட்டில்தான் தன் படிப்புகளை மேற்கொண்டார். லண்டனின் செவென் ஓக்ஸ் பள்ளியில் 2016ம் ஆண்டு படிப்பை முடித்தார். அதன்பிறகு தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஃபைன் ஆர்ட்ஸ், சினிமேட்டிக் ஆர்ட்ஸ், பிலிம் அண்டு டெலிவிஷன் புரடக்‌ஷன் படிப்பில் சேர்ந்து இந்த ஆண்டில்தான் பட்டம் பெற்றார். இந்த சூழ்நிலையில்தான் கப்பலில் நடைபெற்ற போதைப்பார்ட்டியில் ஆர்யன்கான் கலந்து கொண்டாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷாருக்கானின் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்களான திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். 

ஷாருக்கானின் நல்ல நண்பரும் பாலிவுட் நடிகருமான கிர்த்திக் ரோஷன், இன்ஸ்டாகிராமில் ஆர்யனுக்கு ஆறுதலாக ஒரு கடிதம் வெளியிட்டு உள்ளார். அதில் 

என் அன்பான ஆரியன், வாழ்க்கை ஒரு விசித்திரமான பயணம். இது நிச்சயமற்றது என்பதால் அது சிறந்த தாக உள்ளது. அது உங்களுக்கு அனுபவங்களை கொடுக்கிறது.  ஆனால் கடவுள் கனிவானவர். அவர் விளையாடுவதற்கு கடினமான பந்துகளை மட்டுமே கொடுக்கிறார். 

குழப்பங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அழுத்தத்தை உணரும்போது நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். 

ஆர்யன் தனது அனைத்து உணர்ச்சிகளையும்-கோபம், குழப்பம், உதவியற்ற தன்மை ஆகியவற்றை அப்படியே தன்னுள் இருக்க அனுமதிக்க வேண்டும்.கடினமான காலங்கள் உன்னை வலிமையாக்கும் என கூறி உள்ளார்.



Next Story