போதைப்பொருள் வழக்கில் கைதானவரை ஆதரிப்பதா? ஹிருத்திக் ரோஷனை கண்டித்த கங்கனா


போதைப்பொருள் வழக்கில் கைதானவரை ஆதரிப்பதா? ஹிருத்திக் ரோஷனை கண்டித்த கங்கனா
x
தினத்தந்தி 8 Oct 2021 7:41 PM GMT (Updated: 8 Oct 2021 7:41 PM GMT)

போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், ‘‘வாழ்க்கை பிரச்சினைகளை தரக்கூடியது. கடவுள் வலிமையானவர்களுக்கு சிக்கல்களை கொடுப்பார். உனக்குள் இருக்கும் நாயகனை வெளியே கொண்டு வர வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பிரச்சினை மூலம் நீ முதிர்ச்சி அடைவாய். உன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை அனுபவங்களாக ஏற்றுக்கொள். உனக்கு சிறப்பான காலம் காத்து இருக்கிறது. அமைதியாக இருந்து பிரச்சினைகளை கடந்து வெற்றி பெறுவாய்” என்று கூறியுள்ளார்.

ஆர்யன் கானை ஆதரித்த ஹிருத்திக் ரோஷனை நடிகை கங்கனா ரணாவத் கண்டித்துள்ளார். வலைத்தளத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அனைத்து மாபியா பப்புகளும், ஆர்யன் கானை பாதுகாக்க வந்துவிட்டனர். தவறு செய்து இருக்கிறார். செய்த தவறில் திருந்தி பலர் நல்ல இடத்துக்கு முன்னேறி சென்றுள்ளனர். இந்த சம்பவம் ஆர்யன் கானுக்கு புதிய கோணத்தை காட்டி இருக்கும். ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவரை பற்றி கிசுகிசுக்கள் பேசுவது தவறு. அதை விட தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதாக கூறிக்கொண்டு அவர்கள் தவறு செய்யவில்லை என்று உணர வைப்பது கிரிமினல் குற்றம்” என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story