பொன்னியின் செல்வன் படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசிய திரிஷா


பொன்னியின் செல்வன் படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசிய திரிஷா
x
தினத்தந்தி 11 Oct 2021 9:49 AM GMT (Updated: 11 Oct 2021 9:49 AM GMT)

மணிரத்னம் இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

நடிகர்-நடிகைகள் டப்பிங் பேசும் பணியையும் தொடங்கி உள்ளனர். நடிகர்கள் ஜெயராம், நிழல்கள் ரவி ஆகியோர் தங்கள் பகுதிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டனர். கார்த்தி டப்பிங் பேசி வருகிறார். இந்தநிலையில் நடிகை திரிஷாவும் டப்பிங் பேசும் பணியை தொடங்கி உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார். 

முந்தைய பல படங்களுக்கு திரிஷாவுக்கு வேறு பெண் டப்பிங் கலைஞர்கள் பின்னணி குரல் கொடுத்தனர். மங்காத்தா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் திரிஷா சொந்த குரலில் பேசி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்திலும் திரிஷா சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறார். இது வரலாற்று படம் என்பதால் தூய தமிழில் வசனத்தை பேசி இருக்கிறார். இதில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தில் விக்ரம், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், லால், ரகுமான், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. முதல் பாகத்தை அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.


Next Story