விவாகரத்தான நடிகையின் கசப்பான அனுபவங்கள்
நடிகை ஆன் அகஸ்டின் கசப்பான திருமண வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,
தமிழ், தெலுங்கில் வெளியான சோலோ படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்தவர் ஆன் அகஸ்டின். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருதும் பெற்றுள்ளார். ஆன் அகஸ்டின் சில மாதங்களுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
கசப்பான திருமண வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘எனக்கு 23 வயதிலேயே திருமணம் நடந்தது. அது பக்குவம் இல்லாத வயது. அந்த வயதுக்கே உரிய வேகத்தில் தன்னிச்சையாக திருமண முடிவை எடுத்தேன். திருமண வாழ்க்கையை எப்படி அழகாக மாற்றுவது என்று தெரியவில்லை. இதனால் மண வாழ்க்கையில் பல சங்கடங்கள் ஏற்பட்டன. அதில் இருந்து மீள முடியாமல் தவித்தேன்.
விவாகரத்துக்கு பிறகு ஒரு அறைக்கு உள்ளேயே அடைந்து கிடந்து அழுதேன். எனக்கு தைரியம் சொல்ல யாரும் இல்லை. அதன்பிறகு வாழ்க்கை போகும் திசையில் நாமும் பயணிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஒரு பட நிறுவனத்தை தொடங்கினேன். இப்போது நல்லதை மட்டுமே சிந்திக்கிறேன். நல்லதை மட்டுமே செய்கிறேன். இருண்ட காலத்தை கடந்து வந்து விட்டேன். இப்போது வாழ்க்கை நன்றாக இருக்கிறது” என்றார்.
Related Tags :
Next Story