ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் படத்தில், ராணா
தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், ராணா டகுபதி. ‘பாகுபலி’ படத்தின் மூலம் பிரபலமானார். இவர் நடிக்கும் ஒரு புதிய படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.
இந்தப் படத்தை மிலிந்த்ராவ் டைரக்டு செய்கிறார். இவர் ‘கிருகம்’, ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’, ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். 3 பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
அதில், ‘ஜம்பலக்கடி பம்பா’, ‘அஞ்சலி சி.பி.ஐ.’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்த தெலுங்கு பட நிறுவனமும் ஒன்று. இந்தப் பட நிறுவனம் கடந்த 30 வருடங்களாக படம் தயாரித்து வருகிறது. ராணா நடிக்கும் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
Related Tags :
Next Story