சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ளார். பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர்.
கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் குறையத் தொடங்கிய பிறகு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி காரைக்குடி, சென்னை உன்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை சன்பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
#EtharkkumThunindhavan is releasing on Feb 4th, 2022!@Suriya_offl@pandiraj_dir#Sathyaraj@immancomposer@RathnaveluDop#SaranyaPonvannan#MSBhaskar@priyankaamohan#Vinay@sooriofficial@AntonyLRuben@VijaytvpugazhO#ETOnFeb4thpic.twitter.com/hwuwEkX3Bm
— Sun Pictures (@sunpictures) November 19, 2021
Related Tags :
Next Story