‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்..!


‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்..!
x
தினத்தந்தி 19 Dec 2021 12:30 PM GMT (Updated: 19 Dec 2021 12:30 PM GMT)

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

சென்னை,

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஆர்டிக்கிள் 15’ தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில்  உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், ‘பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. காவல்துறை அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து படத்தில் உதயநிதி ஸ்டாலினின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் படத்தின் டப்பிங் செய்யும் பணியை தொடங்கியுள்ளார். அவர் டப்பிங் செய்யும் புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Next Story