மீண்டும் வில்லனாக நடிக்கிறார் செல்வராகவன்..!
'பீஸ்ட்' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் மீண்டும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முண்ணனி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன், தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் நடிப்பில் 'சாணிக் காயிதம்' 'பீஸ்ட்' ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
இதில் செல்வராகவன் 'பீஸ்ட்' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் 'சாணிக்காயிதம்' திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், செல்வராகவன் அடுத்ததாக 'ஒருநாள் கூத்து' மற்றும் 'மான்ஸ்டர்' திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் நடிகர் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முண்ணனி கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இந்த திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
செல்வராகவன் அடுத்தடுத்து நடிகராக படங்களில் ஒப்பந்தமாவது அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'சாணிக் காயிதம்', 'பீஸ்ட்' இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் நடிகர் செல்வராகவன் நடித்து முடித்துவிட்டார்.
செல்வராகவன் இயக்குனராக தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story