கபடி விளையாடிய நடிகை ரோஜா
திருப்பதியில் தேசிய அளவிலான கபடி போட்டியை நடிகை ரோஜா தொடங்கி வைத்து கபடி விளையாடினார்.
திருப்பதியில் தேசிய அளவிலான கபடி போட்டி நடந்து வருகிறது. அதில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்து வீராங்கனைகளுடன் கபடி விளையாடினார்.
அப்போது அவர் பேசுைகயில், கிராமிய விளையாட்டான கபடியை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் ஆண் மற்றும் பெண்கள் அணிகளுக்கு ரூ.3½ லட்சம் பரிசு வழங்கப்படுகிறது, என்றார்.
போட்டியில் மேயர் திரிஷாவும் பங்கேற்று கபடி வீராங்கனைகளுடன் கபடி விளையாடினார்.
Related Tags :
Next Story