1,500 சிவாலயங்களில் ஒரு பட அதிபர்!


1,500 சிவாலயங்களில் ஒரு பட அதிபர்!
x
தினத்தந்தி 22 March 2018 10:30 PM GMT (Updated: 21 March 2018 6:58 AM GMT)

சிவன், ஸ்ரீதர், சந்திரமவுலி, யார், நான்தான்டா ஆகிய படங்களை தயாரித்த தேவிஸ்ரீதேவி சதீஷ், தீவிரமான சிவ பக்தர்.

இந்தியா முழுவதும் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட தேவிஸ்ரீதேவி சதீஷ், கடந்த 2014–ம் ஆண்டில், சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் சிவன் கோவிலில் தரிசனம் செய்து இருக்கிறார்.

இதுவரை, 1,500 கோவில்களுக்கு சென்று சிவனை தரிசித்த இவர், தனது ஆன்மிக பயணம் தொடரும் என்று கூறுகிறார்!

Next Story