கே.வி.ஆனந்தின் கனவு படம்!


கே.வி.ஆனந்தின் கனவு படம்!
x
தினத்தந்தி 8 Sep 2018 11:30 PM GMT (Updated: 8 Sep 2018 8:45 PM GMT)

சூர்யா கதாநாயகனாக நடிக்க, செல்வராகவன் டைரக்டு செய்து வரும் படம் `என்.ஜி.கே.'.

`என்.ஜி.கே.' படம், முடிவடையும் நிலையில் இருக்கிறது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இந்த படம் முதலில் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்தது. இப்போது படத்தின் `ரிலீஸ்' தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது.

`என்.ஜி.கே.' படத்தை அடுத்து சூர்யா, கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருடன் மோகன்லால், ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இது, சூர்யாவின் 37-வது படம். படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. தொடர்ந்து படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

இந்த படத்தை கே.வி.ஆனந்த் தனது கனவு படமாக உருவாக்கி வருகிறார் என்றும், சூர்யா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் படக்குழு வினர் கூறு கிறார்கள்! 

Next Story