3-வது முறையாக விஜய்-அட்லீ!


3-வது முறையாக விஜய்-அட்லீ!
x
தினத்தந்தி 4 Nov 2018 12:31 AM GMT (Updated: 4 Nov 2018 12:31 AM GMT)

அட்லீ இதுவரை, ராஜாராணி, தெறி, மெர்சல் ஆகிய 3 படங்களை டைரக்டு செய்திருக்கிறார்.

தெறி, மெர்சல் ஆகிய 2 படங்களிலும் விஜய் நடித்தார். இரண்டுமே வெற்றி படங்களாக அமைந்ததில், விஜய்க்கு சந்தோஷம். அதனால் அட்லீக்கு மேலும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் கொடுத்து இருக்கிறார்.

இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகி யார், உடன் நடிக்கும் நடிகர்-நடிகைகள் யார்-யார்? என்ற முதல் கட்ட வேலை தொடங்கி விட்டது. வருகிற ஜனவரி மாதம் படப்பிடிப்பை தொடங்குவது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

விஜய் ரசிகர்கள், ‘சர்கார்’ படத்தை திரையில் காண காத்திருக்கும் நிலையில், விஜய்-அட்லீ கூட்டணியில் மேலும் ஒரு படம் உருவாகிறது என்ற தகவல், ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

Next Story