நயன்தாரா சம்பளம் ரூ.6 கோடியாக உயர்ந்தது!
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் முதன்மை நாயகியான நயன்தாரா, படத்துக்கு படம் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறார்.
நயன்தாரா இதுவரை ரூ.4 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவர், `கோலமாவு கோகிலா' படத்துக்குப்பின் தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி விட்டார்.
``நான் நடித்த `கோலமாவு கோகிலா' படம் ரூ.12 கோடி வசூல் செய்து இருக்கிறது. அந்த படத்துடன் வந்த ஒரு பெரிய கதாநாயகனின் படம் ரூ.9 கோடிதான் வசூல் செய்து இருக்கிறது. எனவே என் சம்பளத்தை மேலும் ரூ.2 கோடி உயர்த்தியதில், எந்த தவறும் இல்லை'' என்று சம்பள உயர்வுக்கு காரணம் சொல்கிறாராம், நயன்தாரா!
Related Tags :
Next Story