சமந்தாவின் கோபம்!


சமந்தாவின் கோபம்!
x
தினத்தந்தி 8 Dec 2019 3:30 AM GMT (Updated: 7 Dec 2019 12:18 PM GMT)

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் சமந்தா ‘பிஸி’யாக இருக்கிறார். திருமணத்துக்கு பிறகும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சில நடிகைகளில், சமந்தாவும் ஒருவர்.

சமந்தாவுக்கும், தெலுங்கு நாயகன் நாக சைதன்யாவுக்கும் திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டன. சமந்தா இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.

குழந்தை பற்றி யாராவது விசாரித்தால், சமந்தா கோபப்படுகிறார். என்றாலும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.சமூகவலைத்தளங்கள் மூலம் சமந்தாவிடம், குழந்தை பற்றி கேட்கிறார்கள். 

இதனால் கோபப்பட்ட சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து இருக்கிறார். ‘‘2022-ம் வருடம், ஆகஸ்டு 7-ந் தேதி, 7 மணிக்கு குழந்தை பெற்றுக் கொள்வேன்’’ என்று அவர் கோபமாக பதில் அளித்துள்ளார்.

Next Story