‘‘நடிகராக இருப்பதுதான் சிறந்தது’’


‘‘நடிகராக இருப்பதுதான் சிறந்தது’’
x
தினத்தந்தி 11 Jan 2020 11:45 PM GMT (Updated: 11 Jan 2020 5:31 PM GMT)

சீனுராமசாமி இயக்கி தேசிய விருது பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஜய்சேதுபதி. இவர் தனக்கென்று தனி பாணியை வைத்து இருக்கிறார்.

யதார்த்தமான நடிப்பில் நம்பிக்கை கொண்டவர். அதனால் கதாநாயகனாக நடித்துக் கொண்டே வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அவரிடம், ‘உங்கள் இலக்கு என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு விஜய்சேதுபதி பதில் அளித்தார். ‘‘நாம் ஆசைப்படுவதை ஒரு வியாபாரி வந்து கொடுத்து விட முடியும். வியாபாரிகள் அவ்வளவு சக்தி படைத்தவர்கள். அவர்கள் நம்மை ஆண்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி பார்த்துக் கொண்டால்தான் நாம் விரும்பியதை செய்ய முடியும்.

எதற்காக இதை சொல்கிறேன் என்றால் நான் நடிகனாக இருப்பதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன்’’ என்றார்.

Next Story