ஒத்தையடி பாதை போட்டேன்... இன்று எட்டு வழிச்சாலையாக மாற்றியிருக்கிறார் - விஜய் பற்றி எஸ்.ஏ.சி


ஒத்தையடி பாதை போட்டேன்... இன்று எட்டு வழிச்சாலையாக மாற்றியிருக்கிறார் - விஜய் பற்றி எஸ்.ஏ.சி
x
தினத்தந்தி 5 Nov 2021 5:53 PM GMT (Updated: 5 Nov 2021 5:53 PM GMT)

சென்னையில் நடந்த விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் விஜய் பற்றி பேசி இருக்கிறார்.

விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக நடந்த விழாவில் விஜய்யின் திரையுலக வளர்ச்சி பற்றி மனம் திறந்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

ஒரு படைப்பாளி நினைத்தால் களிமண்ணையும் அழகான பானையாக்க முடியும். உண்மையான உழைப்பு இருந்தால் அழகு ஒரு பொருட்டே இல்லை. என் மகனுக்கு நான் வெறும் ஒரு ஒத்தையடிப் பாதை தான் போட்டுக் கொடுத்தேன் இன்று எட்டு வழிச்சாலை அளவிற்கு அவர் உயர்ந்திருக்கிறார் என்றால் அவரின் உண்மையான உழைப்புதான்.

திரு.ரஜினிகாந்த் உண்மையான உழைப்புதான் அவர்களை இந்த உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. திரைத்துறையைப் பொருத்தவரை உண்மையாக உழைத்தால் ஒருநாள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயரத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

Next Story