கனமழையால் தேங்கிய தண்ணீர் - படகு ஓட்டி அசத்திய மன்சூரலிகான்
கனமழையால் தன் வீட்டிற்கு முன் தேங்கி இருக்கும் தண்ணீரில் நடிகர் மன்சூரலிகான், பாட்டுபாடி படகு ஓட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூரலிகான். வில்லன், காமெடியனாக நடித்து வரும் மன்சூரலிகான், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் நடிகர் மன்சூரலிகான், மழையினால் தனது வீட்டிற்கு முன் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீரில் படகு ஓட்டி இருக்கிறார். மேலும், மழை நிலைமையை பாடி, மகிழ்ந்து வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார் மன்சூரலிகான்.
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் நடிகர் மன்சூரலிகான், மழையினால் தனது வீட்டிற்கு முன் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீரில் படகு ஓட்டி இருக்கிறார். மேலும், மழை நிலைமையை பாடி, மகிழ்ந்து வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார் மன்சூரலிகான்.
Related Tags :
Next Story