பிரபல இயக்குனர் படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்


பிரபல இயக்குனர் படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்
x
தினத்தந்தி 5 Dec 2021 5:55 PM GMT (Updated: 5 Dec 2021 5:55 PM GMT)

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பில் ஆர்வம் காண்பித்து வருகிறார்.

சாணிக் காயிதம் படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடித்து வருகிறார். அடுத்ததாக திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கும் அடுத்த படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

மற்ற நடிகர்கள் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Next Story