நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரியா பவானி சங்கர் படம்
பல படங்களில் நடித்து பிரபலமாகி தற்போது கைவசம் பல படங்களை வைத்து இருக்கும் பிரியா பவானி சங்கரின் ஒரு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர் இன்று தமிழ், தெலுங்கு மொழிகளில் தேவைப்படும் முக்கிய நடிகையாக வளர்ந்திருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் பிளட் மணி என்னும் படத்தில் நடித்துள்ளார். இவருடன் கிஷோர், ஷிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சர்ஜூன் இயக்கத்தில் தயாராகும் இந்த பிளட்மணி என்னும் படத்தில் நடிப்பது குறித்து கூறும்போது, பிளட் மணி படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கிறேன்.
பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் நிறைந்த, இந்த அற்புதமான சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி என்றார். பிளட் மணி ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.
சர்ஜூன் இயக்கத்தில் தயாராகும் இந்த பிளட்மணி என்னும் படத்தில் நடிப்பது குறித்து கூறும்போது, பிளட் மணி படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கிறேன்.
பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் நிறைந்த, இந்த அற்புதமான சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி என்றார். பிளட் மணி ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.
Related Tags :
Next Story