சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி


சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி
x
தினத்தந்தி 22 Dec 2021 5:04 PM GMT (Updated: 22 Dec 2021 5:04 PM GMT)

முத்தையா இயக்கத்தில் தற்போது விருமன் படத்தில் நடித்திருக்கும் கார்த்தி, அண்ணன் சூர்யாவிற்கு நன்றி சொல்லி இருக்கிறார்.

நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் நல்ல படங்களை தயாரித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, “விருமன்” படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மதுரையில் ஆரம்பமானது.

மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் 60 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கார்த்தி கூறும்போது, ‘மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாட்கள் படப்பிடிப்பை இயக்குனர் முத்தையாவும், ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும் நடத்தி உள்ளார்கள். என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எதார்த்தமானவர், அவருடன் நடித்த நாள்கள் ஜாலியானவை.

மீண்டும் இப்படம் மூலம் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைவதில் சந்தோஷம். 2டி நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி’ என்றார்.

படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு குறித்து படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு 2022 சம்மர் வெளியீடாக விருமன் படத்தை களமிறக்க இருக்கிறார்கள்.

Next Story