பெண்களை இப்படி மதிப்பீடு செய்வதை நிறுத்திவிட்டு.. சமந்தாவின் பதிவு


பெண்களை இப்படி மதிப்பீடு செய்வதை நிறுத்திவிட்டு.. சமந்தாவின் பதிவு
x
தினத்தந்தி 14 March 2022 4:47 PM GMT (Updated: 14 March 2022 4:47 PM GMT)

தமிழின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ஆடையை குறித்து பகிர்ந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டார்.

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார். அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடிப்பதில் முழுகவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில், சமந்தா ஆடிய ’ஓ சொல்றியா மாமா’ பாடல் சில எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துவந்தார். இந்நிலையில், நடிகை சமந்தா கருப்பு பச்சை உடை அணிந்து வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின, இந்த புகைப்படங்கள் குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் நடிகை சமந்தா அதற்கு பதிலளிக்கும் வகையில் அவருடைய சமூக வலைத்தளத்தில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு பெண்ணை அவரின் அலங்கார பொருட்களை வைத்து மதிப்பீடு செய்வதை நிறுத்திவிட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாமா என்று நீண்ட பதிவின் தெரிவித்துள்ளார்.



Next Story