கோவாவில் தொடங்கியது சூர்யா படத்தின் ஷூட்டிங்


கோவாவில் தொடங்கியது சூர்யா படத்தின் ஷூட்டிங்
x

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில், சூர்யா 5 கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி இருக்கிறது. அங்கு, சூர்யா, திஷா பதானி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story