வேன் மோதி கொத்தனார் பலி


வேன் மோதி கொத்தனார் பலி
x
தினத்தந்தி 6 Sep 2018 9:30 PM GMT (Updated: 6 Sep 2018 5:01 PM GMT)

நெய்வேலி அருகே வேன் மோதி கொத்தனார் பலியானார்.

நெய்வேலி,

நெய்வேலி பி–2 மாற்றுக்குடியிருப்பை சேர்ந்தவர் முருகையன் (வயது 55). கொத்தனார். இவர் நேற்று பண்ருட்டியில் இருந்து மாற்றுக்குடியிருப்பு நோக்கி தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். தில்லைநகர் அருகே சென்ற போது, பின்னால் வந்த வேன், மொபட் மீது மோதியது. 

இதில் காயமடைந்த முருகையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி முருகையன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story