கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது கர்நாடகத்தில் புதிதாக 8,477 பேருக்கு வைரஸ் தொற்று


கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது கர்நாடகத்தில் புதிதாக 8,477 பேருக்கு வைரஸ் தொற்று
x
தினத்தந்தி 15 Oct 2020 10:27 PM GMT (Updated: 15 Oct 2020 10:27 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 8,477 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 35 ஆயிரத்து 371 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 8,477 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 43 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில், பாகல்கோட்டையில் 133 பேர், பல்லாரியில் 287 பேர், பெலகாவியில் 303 பேர், பெங்களூரு புறநகரில் 454 பேர், பெங்களூரு நகரில் 3,788 பேர், பீதரில் 10 பேர், சாம்ராஜ்நகரில் 85 பேர், சிக்பள்ளாப்பூரில் 230 பேர், சிக்கமகளூருவில் 92 பேர், சித்ரதுர்காவில் 159 பேர், தட்சிண கன்னடாவில் 301 பேர், தாவணகெரேயில் 103 பேர், தார்வாரில் 164 பேர், கதக்கில் 40 பேர், ஹாசனில் 440 பேர், ஹாவேரியில் 41 பேர், கலபுரகியில் 42 பேர், குடகில் 158 பேர், கோலாரில் 81 பேர், கொப்பலில் 76 பேர், மண்டியாவில் 230 பேர், மைசூருவில் 303 பேர், ராய்ச்சூரில் 59 பேர், ராமநகரில் 59 பேர், சிவமொக்காவில் 169 பேர், துமகூருவில் 252 பேர், உடுப்பியில் 179 பேர், உத்தரகன்னடாவில் 57 பேர், விஜயாப்புராவில் 160 பேர், யாதகிரியில் 7 பேர் உள்ளனர்.

85 பேர் பலி

மாநிலத்தில் கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 45 பேர், பல்லாரி, பெலகாவி, சிவமொக்கா, துமகூருவில் தலா 3 பேர், சிக்பள்ளாப்பூரில் 4 பேர், தட்சிண கன்னடா, தார்வார், கோலார், மண்டியா, மைசூரு, உடுப்பி, உத்தரகன்னடா, விஜயாப்புராவில் தலா 2 பேர் உள்பட 85 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 811 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 63 லட்சத்து 55 ஆயிரத்து 803 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரே நாளில் 8,841 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 20 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்து 13 ஆயிரத்து 538 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 939 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறைய தொடங்கியுள்ளது

கர்நாடகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்குள் கீழ் வந்துள்ளது. நேற்று முன்தினம், 9,265 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று இது நேற்று 8,477 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

Next Story