ரஷ்ய உலக கோப்பை செஸ் போட்டி: ஈரோடு வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் தேர்வு; இந்தியாவில் இருந்து பங்கேற்கும் ஒரே போட்டியாளர்


ரஷ்ய உலக கோப்பை செஸ் போட்டி: ஈரோடு வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் தேர்வு; இந்தியாவில் இருந்து பங்கேற்கும் ஒரே போட்டியாளர்
x
தினத்தந்தி 31 May 2021 9:02 PM GMT (Updated: 31 May 2021 9:02 PM GMT)

ரஷ்யாவில் நடைபெற உள்ள உலக கோப்பை செஸ் போட்டியில் ஈரோடு வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்கும் ஒரே போட்டியாளராக இவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஈரோடு
ரஷ்யாவில் நடைபெற உள்ள உலக கோப்பை செஸ் போட்டியில் ஈரோடு வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்கும் ஒரே போட்டியாளராக இவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
உலக கோப்பை
உலக கோப்பை சதுரங்க (செஸ்) போட்டி ரஷ்யாவில் வருகிற ஜூலை 10-ந் தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி மற்றும் தேர்வு போட்டியை அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு நடத்தியது. கடந்த மே மாதம் 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காணொலி போட்டியாக நடத்தப்பட்டது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக வீரர்கள் அவரவர் வீடுகளில் அமர்ந்து சர்வதேச நடுவர்கள் மேற்பார்வையில் காணொலியில் நேரலையாக விளையாடினர். 
இந்த தகுதி மற்றும் தேர்வு போட்டியில் ஈரோட்டை சேர்ந்த பிரபல செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான இனியன் பங்கேற்றார். அவருடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிராண்ட் மாஸ்டர்கள் 16 பேர் பங்கேற்றனர்.
ஒரே வீரர்
கிராண்ட் மாஸ்டர் இனியன், கிராண்ட் மாஸ்டர்கள் அதிபன், நாராயணன், குகேஷ், விஷ்ணு பிரசன்னா உள்பட 12 வீரர்களுடன் விளையாடி வெற்றி பெற்றார். கிராண்ட் மாஸ்டர் சேதுராமனை இனியன் டிரா செய்தார்.
 இதன் மூலம் 12.5 புள்ளிகள் பெற்று போட்டியில் முதல் இடம் பிடித்தார். இதன் மூலம் உலக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று, இந்தியாவின் ஒரே வீரராக இனியன் தேர்வு பெற்று உள்ளார்.
இதன் மூலம் ரஷ்ய உலக கோப்பை -2021 போட்டியில் இந்தியா சார்பில் இனியன் பங்கேற்று விளையாட உள்ளார்.
 ஈரோட்டில் வீட்டில் இருந்தே மிக சிறப்பாக விளையாடி தமிழகத்துக்கு பெருமை சேர்த்த இனியனுக்கும், அவரது தந்தை பன்னீர்செல்வம், தாயார் சரண்யா மற்றும் பயிற்சியாளர் விஸ்வேஸ்வரன் ஆகியோருக்கும் சதுரங்க விளையாட்டு உலகத்தினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story