விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு


விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 9 Jan 2022 6:53 PM GMT (Updated: 9 Jan 2022 6:53 PM GMT)

விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலைகொழுந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைகண் (வயது 52). கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக சுடலைகண் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுடலைகண் நேற்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story