நாளை மின் தடை
மல்லாங்கிணறு பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே மல்லாங்கிணறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதலால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத்துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்திக்குண்டு, மேலதுலுக்கன்குளம், அழகியநல்லூர், கெப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி, வரலொட்டி, வில்லிபத்திரி, வழுக்கலொட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story