2 மாநில தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி


2 மாநில தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி
x
தினத்தந்தி 18 Dec 2017 7:04 AM GMT (Updated: 18 Dec 2017 7:03 AM GMT)

2 மாநில தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி விடுத்து உள்ளார்.

சென்னை

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ்  என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர்" என விமர்சித்தார்.

அது முதல் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் அரசுக்கு எதிராக பல்வேறு     கேள்விகளை எழுப்பி வருகிறார்.

இந்த நிலையில் பாரதீய ஜனதா குஜராத், மற்றும் இமாசலபிரதேசம்  ஆகிய 2 மாநிலங்களில் வெற்றி பெற்று உள்ளது.  இது குறித்து  நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அன்புள்ள பிரதம மந்திரி, வெற்றிக்கு வாழ்த்துக்கள் ... ஆனால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story