பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்


பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்
x
தினத்தந்தி 17 Oct 2018 10:26 AM GMT (Updated: 17 Oct 2018 10:26 AM GMT)

இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் சுசி கணேசன் தன் தந்தையை மிரட்டியதாக நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

சென்னை

இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்திருந்தார்.இதனால் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில், லீனா மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.மேலும் இந்த மீ டூ வால் பெண்களுக்கு  வேலையில்லா நிலை ஏற்படும் எனவும் கடுமையாக சாடினார்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் பரபரப்பு தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்."நான் லீனாவின் பக்கம் நின்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இயக்குனர் சுசி கணேசன் என்  வயது முதிர்ந்த தந்தையை தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.எனவே நான் இப்போது அனைவருக்கும் அழுத்தமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் லீனா மணிமேகலைக்கு துணை நிற்கிறேன்.தைரியமுடன் போராடுங்கள் சகோதரி " என பதிவிட்டுள்ளார்.


Next Story