அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன்! ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் பதிவு


அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன்! ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் பதிவு
x
தினத்தந்தி 15 Dec 2019 2:34 PM GMT (Updated: 15 Dec 2019 2:34 PM GMT)

அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன் என்று டுவிட்டரில் நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன். இது தொடர்பாக நேற்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து விளக்கமளித்தாக கூறினார்.

இந்நிலையில்,  அரசியல் சாராத புதிய இயக்கத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். இதுவரை என்னைத்தான் தவறாக பேசிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது தாய் தந்தையரைப் பற்றியும் மிக தவறாக பேசுகிறார்கள். மொழியை ஒரு போர்வையாக பயன்படுத்திக் கொண்டு தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்.

நான் ஒரு தனி மனிதன். எனக்கென்று தனிக் கூட்டமில்லை. நான் படிக்காதவன்.
ஒரு தனி மனிதனாய் நின்று அன்புதான் தமிழ் என்கிற, அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன். 

இந்த அமைப்பின் மூலம், தமிழரின் மாண்பையும், தமிழரின் பண்பையும்,
தமிழரின் அன்பையும், உலகறிய செய்வதே அதன் நோக்கம்!

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் என்ற திருக்குறளை பின்பற்றியே, எதிரிக்கும் உதவி செய், பிறர் துன்பங்களை உன் துன்பமாக நினை, நாமெல்லாம் உருவத்தால்தான் வெவ்வேறு, உள்ளத்தால் ஒன்றே. 

கடவுளை வெளியே தேடாதே!, உனக்குள் இருக்கிறார். எனக்கு இது போதும் என்று நினை. 

ஆசையை விடு! அள்ளிக்கொடு!. ஆண்டவன் உன் பக்கம்.

அந்த ஆண்டவன் இருப்பது உண்மையானால்.... தர்மம் இருப்பது உண்மையானால்... என்வழி உண்மையானால்... நான் துவங்கும் இந்த அறம் சார்ந்த சேவை அமைப்பிற்கு இந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கட்டும்.

இறுதியாக ஒன்று. என்னை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்களும், அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும், நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சில காலமாக அவரை குறிப்பிட்டக் கட்சியினர் தாக்கி பேசி வருவதாக புகார் எழுந்த நிலையில், அவர் இந்த அமைப்பைத் தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story