திருநங்கைகள் பற்றிய கருத்து: "ஹாரி பாட்டர்" எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் விளக்கம்


திருநங்கைகள் பற்றிய கருத்து: ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் விளக்கம்
x
தினத்தந்தி 11 Jun 2020 3:09 AM GMT (Updated: 11 Jun 2020 9:37 AM GMT)

திருநங்கைகளைப் பற்றி கருத்து குறித்து பிரபல "ஹாரி பாட்டர்" நாவல் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் விளக்கம் அளித்து உள்ளார்.

லண்டன்:

இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் (வயது54). இவர் எழுதிய "ஹாரி பாட்டர்" நாவல்தான் பல பாகங்களாக திரைப்படமாக எடுக்கப்பட்டது.

"மாதவிடாய் மக்கள்" திருநங்கைகளைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையை விமர்சித்து டுவிட் செய்து சர்ச்சையில் சிக்கி கொண்டார்.

ரவுலிங்கின் கருத்துக்களை விமர்சித்தவர்களில் நடிகர் டேனியல் ரெட்கிளிப் என்பவரும் ஒருவர் ஆவார்.

அதற்கு பதிலளித்து அவர் எழுதி உள்ள 3,695  சொற்கள் கட்டுரையில் பாலின அடையாளம் மற்றும் அவரது சொந்த சிக்கலான கடந்த காலத்தைப்பற்றி எழுதி உள்ளார்.

அதில் இந்த விவகாரம் பற்றி பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்ததற்கு ஐந்து காரணங்கள் இருப்பதாக கூறி உள்ளார்.

நான் இப்போது இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பார்வையில் இருக்கிறேன், துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் பற்றி நான் பகிரங்கமாக பேசியதில்லை.

பாலியல் வன்கொடுமை குறித்த தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக திருநங்கைகளின் பிரச்சினைகள் குறித்து ஓரளவு பேசியதாக ஜே.கே.ரவுலிங் கூறியுள்ளார்.

எனக்கு நடந்ததை நான் கூறுகிறேன் அவை மறுபரிசீலனை செய்வதற்கும் நினைவில் கொள்வதற்கும் அதிர்ச்சிகரமானவை என்பதால் என அதில் கூறி உள்ளார்.

திருநங்கை ஆர்வலர்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் எனது டுவிட்டர் பக்கத்தில் குவிந்து வருகின்றன.

அதிகமான  பெண்கள் திருநங்கை ஆர்வலர்களால் நியாயமாக பயப்படுகிறார்கள்; எனக்கு இது தெரியும், ஏனென்றால் பலர் தங்கள் கதைகளைச் சொல்ல என்னுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

நான் எனது கடந்த காலத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன், ஏனென்றால், இந்த கிரகத்தில் உள்ள மற்ற மனிதர்களைப் போலவே, எனக்கு ஒரு சிக்கலான பின்னணி உள்ளது, இது எனது அச்சங்களையும், ஆர்வங்களையும், எனது கருத்துகளையும் வடிவமைக்கிறது என கூறி உள்ளார்.


Next Story