பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு: எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு


பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு: எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 9:40 AM GMT (Updated: 31 Aug 2021 9:40 AM GMT)

பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் பதிவை படிக்காமல் ஏன் பிறருக்கு அனுப்பினீர்கள்? என எஸ்.வி சேகரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சென்னை

பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்துத் தரக்குறைவான கருத்தை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர் 2018ஆம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர்,மதுரை ஐகோர்ட்டில்  அல் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி நிஷாபானு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

எ.ஸ்.வி சேகர் தரப்பில் அந்தப் பதிவை எஸ்.வி சேகர் படிக்காமல் பிறருக்குப் பகிர்ந்துள்ளார் (பார்வர்ட்). அதற்கு மன்னிப்பும் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

பதிவை படிக்காமல் ஏன் பிறருக்கு அனுப்பினீர்கள்? என  எஸ்.வி சேகரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். பதிவை பார்வர்ட் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா? என கூறி வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வழக்கை ஒருவாரத்திற்கு  ஒத்தி வைத்தார்.


Next Story