ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டெல்லி அணிக்கு 150 ரன்கள் இலக்கு

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்,
பெங்களூரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 20-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்துள்ளது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக வீரர் விராட் கோலி 41 (33) ரன்கள், மொயின் அலி 32 (18) ரன்கள் எடுத்தனர்.
டெல்லி அணியில் சிறப்பாக பந்து வீசிய ரபடா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் மோரிஸ் 2 விக்கெட், லமிச்சானே மற்றும் அக்ஷர் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.
Related Tags :
Next Story






