ஐ.பிஎல். கிரிக்கெட் போட்டி: 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி


ஐ.பிஎல். கிரிக்கெட் போட்டி: 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
x
தினத்தந்தி 8 May 2019 5:54 PM GMT (Updated: 8 May 2019 8:20 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது. #SRHvsDC

விசாகப்பட்டினம்,

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கான இடையேயான வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றுப்போட்டி நடைப்பெற்றது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி ஐதராபாத் அணியின் சார்பில் விரிதிமான் சகா, குப்தில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் விரிதிமான் சகா 8(9) ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து குப்திலுடன், மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் பொருப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. அதில் குப்தில் 36(18) ரன்களும், மணீஷ் பாண்டே30(36) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய கேன் வில்லியம்சன் 28(27) ரன்களும், விஜய் சங்கர் 25(11) ரன்களும், முகமது நபி 20(13) ரன்களும், தீபக் ஹூடா 4(4) ரன்களும், ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

முடிவில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக கீமோ பால் 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா, ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ஷிகார் தவான் 17(16) ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேய் அய்யர் 8(10) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா, தனது அரைசத்தினை பதிவு செய்த நிலையில் 56(38) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய கோலின் முன்ரோ 14(13) ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 0(3) ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். அடுத்ததாக ரிஷாப் பாண்ட், ரூதர் போர்டு ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியில் அதிரடியில் கலக்கிய ரிஷப் பாண்ட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த ஜோடியில் ரூதர் போர்டு 9(12) ரன்களில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷாப் பாண்ட் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49(21) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய அமித் மிஸ்ரா 1(1) ரன்னில் ரன் அவுட் மூலம் வெளியேற்றப்பட்டார்.

இறுதியில் டிரண்ட் போல்ட் (0) ரன் ஏதும் எடுக்காமலும், கீமோ பால் 5(4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி 19.5 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக கலில் அஹமது, ரஷித் கான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீபக் ஹூடா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் டெல்லி அணி, நாளை மறுநாள் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்கொள்கிறது.



Next Story