ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி; மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி; மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 1 Oct 2020 6:16 PM GMT (Updated: 1 Oct 2020 6:16 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

துபாய்,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஐ.பி.எல். தொடரின் 13-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற கேப்டன் கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங்கை துவக்கிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியில் அதிக அளவாக பூரன் (44), அகர்வால் (25) ரன்கள் மற்றும் கவுதம் (22) ரன்கள் எடுத்தனர்.  அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.  இதனால், போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Next Story