ஐ.பி.எல். போட்டி; ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


ஐ.பி.எல். போட்டி; ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 2 Oct 2020 6:08 PM GMT (Updated: 2 Oct 2020 6:08 PM GMT)

ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

துபாய்,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஐ.பி.எல். போட்டி தொடரின் 14-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 தொடங்கியது.  இந்த போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற கேப்டன் டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன்பின்னர் விளையாடிய சென்னை அணியில் பிளெஸ்சிஸ் 22 ரன்களில் ரன்அவுட் ஆனார்.  வாட்சன் (1), ராயுடு (8), ஜாதவ் (3), ரன்களில் ஆட்டமிழந்தனர்.  ஜடேஜா அரை சதம் (50) விளாசினார்.  கேப்டன் தோனி (47), கர்ரன் (15) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.  இதனால் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Next Story