ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி: சென்னை அணி பந்துவீச்சு


ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி: சென்னை அணி பந்துவீச்சு
x
தினத்தந்தி 4 Oct 2020 2:03 PM GMT (Updated: 4 Oct 2020 2:03 PM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

துபாய்,

13-வது ஐபிஎல் சீசனின் 18-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியில் கருண், கௌதம், நீஷம் ஆகியோர் நீக்கப்பட்டு மந்தீப் சிங், ஹர்பிரீத் பிரார், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை அணியில் மாற்றம் எதுவும் இல்லை.




Next Story