ஐ.பி.எல். போட்டிகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரிப்பு


ஐ.பி.எல். போட்டிகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2020 12:03 AM GMT (Updated: 1 Nov 2020 12:03 AM GMT)

ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் தொடரின் பார்வையாளர்கள் எண்ணிக்கை இந்த வருடம் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவுப் பகுதியை அடைந்துள்ளன. நவம்பர் 3 வரை நடைபெறவுள்ள லீக் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இதுவரை பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நவம்பர் 5 முதல் பிளே ஆஃப் சுற்று தொடங்குகிறது. இறுதிச்சுற்றின் கடைசி ஆட்டம் நவம்பர் 10 அன்று நடைபெறுகிறது.

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிகள் துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மைதானத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. தொலைக்காட்சி சேனல்களிலும், ஓ.டி.டி. எனப்படும் ஆன்லைன் தளங்களிலும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில், ஐ.பி.எல். போட்டியின் தொலைக்காட்சி ரேட்டிங் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 21 சேனல்களில் முதல் 41 போட்டிகளுக்கு 700 கோடி பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். கடந்த வருடம் 24 சேனல்களில் முதல் 44 போட்டிகளுக்கு 550 கோடி பார்வையாளர்கள் கிடைத்தனர். இதையடுத்து இந்த வருட ஐ.பி.எல். போட்டிக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக பார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

Next Story