கோலியின் பேட்டி எந்த கருத்தும் கூற முடியாது - சவுரவ் கங்குலி
கோலியின் பேட்டி தொடர்பாக எந்த கருத்தும் கூற முடியாது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
மும்பை,
கோலியின் பேட்டி தொடர்பாக எந்த கருத்தும் கூற முடியாது எனவும் இது குறித்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். கேப்டன்ஷிப் குறித்த விராட் கோலியின் கருத்துக்களுக்கு நேரடியாக பதிலளிக்க பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
அதை கிரிக்கெட் வாரியத்திடம் விட்டு விடுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என மட்டுமே கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது தொடர்பாக கங்குலி, கோலி இருவரும் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story