ஐபிஎல் கிரிக்கெட் : பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .
இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி முதல் போட்டியில் வெற்றியும் ,இரண்டாவது போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது . பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தியது .
தோல்வியிலிருந்து மீள கொல்கத்தா அணியும் ,வெற்றியை தொடர பஞ்சாப் அணியும் தீவிரம் காட்டும் முனைப்பில் களமிறங்குகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கவுள்ளது.
Related Tags :
Next Story