ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு


ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 3 April 2022 1:40 PM GMT (Updated: 3 April 2022 1:40 PM GMT)

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

மும்பை,

15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை அணி தங்கள் முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது. அதன் பிறகு லக்னோ அணியுடன் நடந்த 2-வது போட்டியில்  சென்னை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தும் பந்துவீச்சில் கோட்டைவிட்டதால் தோல்வியை தழுவியது.

அதே போல் பஞ்சாப் அணி முதல் போட்டியில் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. ஆனால் 2-வது போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியுற்றது.

தோல்வியில் இருந்து மீள பஞ்சாப் அணியும்- முதல் வெற்றியை பெற சென்னை அணியும் இன்று களம் காண்கின்றன.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .இதில் டாஸ் வென்ற சென்னை அணி  பந்துவீச்சை தேர்வு  செய்துள்ளது  .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது 
  

Next Story