தொடரும் மும்பை அணியின் தோல்வி - ரோகித் சர்மா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டியிலும் தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கிறது
மும்பை,
நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் 26-வது லீக் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் மோதின .இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது .
இந்த போட்டியில் தோல்வி அடைந்த மும்பை அணிக்கு இது 6வது தோல்வி ஆகும் . மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டியிலும் தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கிறது .இது அந்த அணியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,
இந்நிலையில் தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ;
மும்பை அணியின், தோல்விகளுக்கு நான் முழு பொறுப்பேற்று கொள்கிறேன். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக நான் செயல்படவில்லை.அடுத்து வரும் போட்டிகளில் மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
Related Tags :
Next Story