முதல் ஓவரிலே நடையை கட்டிய ரோகித் சர்மா, இஷான் கிஷன் - முகேஷ் சவுத்ரி அசத்தல் பந்துவீச்சு


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 21 April 2022 2:21 PM GMT (Updated: 21 April 2022 2:21 PM GMT)

மும்பை அணியின் அதிரடி வீரர் ப்ரீவிசை 4 ரன்களில் முகேஷ் சவுத்ரி வெளியேற்றினார்.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும்  போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி  2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார்.

தொடர்ந்து ஓவரின் 5-வது பந்தில் இஷான் கிஷன் போல்டானார். இதனால் முதல் ஓவரிலே மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர்.

தொடர்ந்து 2-வது ஓவரை வீச வந்த முகேஷ் மும்பை அணியின் அதிரடி வீரர் ப்ரீவிசை 4 ரன்களில் வெளியேற்றினார்.. இதனால் மும்பை அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.

Next Story