ஐபிஎல் : சென்னை அணிக்கு மேலும் பின்னடைவு : ஜடேஜா தொடரிலிருந்து விலகல்..!


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 11 May 2022 4:13 PM GMT (Updated: 11 May 2022 4:13 PM GMT)

ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்

மும்பை,

ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இந்த தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 4 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது .தற்போதுவரை சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பில் இருந்து வெளியேறவில்லை.

இந்நிலையில் சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் .இது சென்னை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது.இதனால் கடந்த மே 8ம் தேதி நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை .

காயத்திலிருந்து ஜடேஜா இன்னும் மீளாததால் அவர்  தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது .

Next Story